Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 15, Verse 5

நிர்மானமோஹா ஜித1ஸங்க3தோ3ஷா அத்4யாத்1மநித்1யா விநிவ்ருத்11கா1மா: |

த்3வன்த்3வைர்விமுக்1தா1: ஸுக2து:க2ஸம்ஞ்ஞைர் கச்12ந்த்1யமூடா4: ப13மவ்யயம் த1த்1 ||5||

நிஹி--—விடுபட்டு; மான---வீண் தற்பெருமயிலிருந்து; மோஹாஹா—மாயையை; ஜித---கடந்து; ஸங்க--—பற்றுதலை; தோஷாஹ---தீமைகளை; அத்யாத்ம-நித்யாஹா---சுயம் மற்றும் கடவுளில் மீது தொடர்ந்து வசிப்பது; விநிவ்ரித்த--இதிலிருந்து விடுபட்ட; காமாஹா---புல பொருட்களை அனுபவிக்க ஆசை; த்வந்த்வைஹி---இருமைகளில் இருந்து; விமுக்தாஹா--—விடுபட்டவர்களும்; ஸுகதுஹ்க--—இன்பம் மற்றும் வலி; ஸம்ஞ்ஞைஹி-—அறியப்படும்; கச்சந்தி--—அடைகிறார்கள்; அமூடாஹ--—கலக்கமற்ற; பதம்--—வசிப்பிடம்; அவ்யயம்--—நித்தியமான; தத்---அது

Translation

BG 15.5: மாயை மற்றும் மாயையிலிருந்து விடுபட்டவர்களும், பற்றுதல் என்ற தீமையை வென்றவர்களும், சுயம் மற்றும் கடவுளின் மீது தொடர்ந்து வசிப்பவர்களும், புலன்களை அனுபவிக்கும் விருப்பத்திலிருந்து விடுபட்டவர்களும், இன்பம் மற்றும் துன்பம் என்ற இருமைகளுக்கு அப்பாற்பட்டவர்களும், அத்தகைய முக்தி பெற்றவர்கள் என் நித்ய இருப்பிடத்தை அடைகிறார்கள்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது ஒப்புயர்வற்ற கடவுளாகிய மரத்தின் அடிப்பகுதியை எவ்வாறு சரணடைவது என்பதை விளக்குகிறார். அறியாமையால் பிறந்த அகந்தையை முதலில் கைவிட வேண்டும் என்கிறார். உருவான ஆன்மா, மாயையில், தற்சமயம், 'என்னிடமுள்ள அனைத்திற்கும் நான் அதிபதி, எதிர்காலத்தில், நான் இன்னும் அதிகமாகப் பெறுவேன். இவை அனைத்தும் என் இன்பத்திற்க்கும் மகிழ்ச்சிக்கும் ஆகவே.’ என்று நினைக்கிறது. பெருமையின் போதையில் இருக்கும் வரை, நாம் பொருள் இயற்கையை அனுபவிப்பவர் என்று நினைக்கிறோம். அப்படிப்பட்ட நிலையில் நாம் இறைவனை அவமரியாதை செய்கிறோம், கடவுளின் விருப்பத்திற்கு சரணடைய விரும்புவதில்லை.

நாம் அனுபவிப்பவர் என்ற தவறான எண்ணத்தை அறிவின் உதவியுடன் அகற்ற வேண்டும். பொருள் ஆற்றல் கடவுளுக்கு சொந்தமானது மற்றும் அவருடைய சேவைக்கானது என்பதை நாம் உணர வேண்டும். ஆன்மா இறைவனின் அடிமை, எனவே இந்திரிய பொருட்களை அனுபவிக்கும் மனப்பான்மையை சேவை மனப்பான்மையாக மாற்ற வேண்டும். இதற்காக, மனதை உலகத்தை நோக்கி இழுக்கும் மற்றும் கடவுளிடமிருந்து விலகிச் செல்லும் பொருள் பற்றுகளை நாம் அகற்ற வேண்டும். மாறாக, சுயத்தின் உண்மையான தன்மையை கடவுளின் நித்திய ஊழியராக புரிந்துகொண்டு, தன்னலமற்ற சேவை மனப்பான்மையில் மனதைக் கடவுளுடன் இணைக்க வேண்டும். ப1த்3ம புராணம் கூறுகிறது:

தா3ஸ பூ41மித3ம் த1ஸ்ய ஜக3த்1ஸ்தா2வர ஜங்க3மம்

ஸ்ரீமன்நாராயண ஸ்வாமி ஜக3தா1ம்ப்1ரபு4ரீஶ்வரஹ

‘ஒப்புயர்வற்ற கடவுளான ஸ்ரீ நாராயணன் உலகின் கட்டுப்பாட்டாளர் மற்றும் இறைவன். இந்த படைப்பில் உள்ள அனைத்து அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் மற்றும் உறுப்புகள் அனைத்தும் அவருடைய ஊழியர்கள்.’ எனவே, கடவுளுக்குச் சேவை செய்யும் விருப்பத்தை நாம் எவ்வளவு அதிகமாக வளர்த்துக் கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக ப்ரகிருதியை அனுபவிப்பவர் என்ற மாயை நீங்கி இதயம் சுத்தமாகும். ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹாராஜ், இதயத்தைச் சுத்தப்படுத்துவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த வழிமுறையாக, எல்லாவற்றையும் விட இந்தக் கருத்தை வலியுறுத்தினார்:

ஸௌ பா3த்11ன் கி1 பா3த்11 ஏக, த4ரு முரளித4ர தி4யானா,

3டவஹு ஸேவா-வாஸனா, யஹா ஸோ ஞானன ஞான

(ப4க்1தி1 ஶத1க், வசனம் 74)

' தூய்மைப் படுத்துவதற்கான நூறு அறிவுரைகளில், மிக முக்கியமானது இதுதான்:உங்கள் மனம் தெய்வீக புல்லாங்குழல் வாசிப்பாளரான ஸ்ரீ கிருஷ்ணரில் லயிக்கட்டும்.மேலும் அவருக்கு சேவை செய்வதற்கான உங்கள் விருப்பத்தை அதிகரித்துக் கொண்டே இருங்கள். இந்த ஆலோசனை இது போன்ற நூறு அறிவு ரத்தினங்களை விட முக்கியமானது.’

ஒருமுறை நாம் நமது இதயங்களைச் சுத்தப்படுத்துவதில் வெற்றி பெற்று, கடவுளின் அன்பான சேவையில் முழுமையாக நிலைத்திருப்பதற்கு பிறகு , என்ன நடக்கும்? ஸ்ரீகிருஷ்ணர் இந்த வசனத்தில் அத்தகைய பரிபூரண ஆத்மாக்கள் நித்திய ஆன்மீக சாம்ராஜ்யம்த்திற்குச் செல்கின்றன என்பதை விளக்குகிறார். கடவுள் உணர்வு நிலை நிலையை அடையும்போது பொருள் சாம்ராஜ்யம் எவ்விதமான நோக்கத்திற்கும் பயனற்றதாகிறது. ஆன்மா அப்போதுதான் மற்ற கடவுள்-உணர்ந்தவர்களுடன் சேர்ந்து கடவுளின் தெய்வீக வாசஸ்தலத்தில் வசிக்க தகுதி உடையதாகிறது. ஒரு சிறை ஒரு நகரத்தின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது போல, பொருள் சாம்ராஜ்யம். கடவுளின் முழு படைப்பில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே. கடவுளின் முழு படைப்பில் ஆன்மீக மண்டலம் நான்கில் மூன்று பங்கை ஆக்கிரமித்துள்ளது. வேதங்கள் கூறுகின்றன:

பா1தோ3 ’ஸ்ய விஷ்வா பூ4தா1னி, த்1ரிபா1த3ஸ்ய அம்ரித1ம் தி3வி

(பு1ருஷ ஸுக்11ம், மந்தி1ரம் 3)

வாழ்க்கை மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்ட.படைப்பின். மற்ற மூன்று பகுதிகளும் கடவுளின் நித்திய உறைவிடங்கள். பின்வரும் வசனத்தில் அந்த நித்திய தங்குமிடத்தின் தன்மையை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
15. புருஷோத்தம யோகம்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!